Paristamil Navigation Paristamil advert login

பா-து-கலே கடலில் இருந்து 150 அகதிகள் மீட்பு..!

பா-து-கலே கடலில் இருந்து 150 அகதிகள் மீட்பு..!

7 ஆனி 2024 வெள்ளி 12:00 | பார்வைகள் : 1582


பா து கலே மாவட்டத்தின் ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியா நோக்கி செல்ல முற்பட்ட கிட்டத்தட்ட 150 அகதிகள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 

ஜூன் 6, வியாழக்கிழமை இந்தமீட்பு நடவடிக்கை இடம்பெற்றது. முதலாவது படகு 74 அகதிகளுடம், இரண்டாவது படகு 18 அகதிகளுடன், மூன்றாவது படகு 56  அகதிகளுடன் என மொத்தமாக 148 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். 

இவற்றில் ஒரு படகு Dunkerque (Nord) பகுதியில் இருந்து பயணித்ததாகவும், ஏனைய படகுகள் கலே கடற்பகுதியில் இருந்து பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக பிரெஞ்சு கடற்படையினர் தெரிவித்தனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்