Paristamil Navigation Paristamil advert login

யாழில் அருட்தந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை

யாழில் அருட்தந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை

26 ஆவணி 2023 சனி 02:29 | பார்வைகள் : 3234


தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அருட்தந்தையரின் கழுத்தில் கத்தி வைத்து , பெருமளவான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.  

யாழ்ப்பாணம் , கல்வியங்காட்டு பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றினுள்  வியாழக்கிழமை அத்துமீறி நுழைந்த நால்வர் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று அருட்தந்தையரின் கழுத்தில் கத்தியை வைத்து , மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டது.

அருட்தந்தையரின் 30 ஆயிரம் ரூபாய் பணமும் , தேவாலய உண்டியலில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் கோப்பாய்  பொலிஸார் தெரிவித்தனர்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்