■ எலிசே மாளிகையில் அவசரச் சந்திப்பு..!
9 ஆனி 2024 ஞாயிறு 17:22 | பார்வைகள் : 3681
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று மாலை அவசர சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
பிரதமர் கேப்ரியல் அத்தால் உள்துறை அமைச்சர் Gérald Darmanin ஆகியோருடன் இந்த சந்திப்பு ஜனாதிபதியின் எலிசே மாளிகையில் இடம்பெற உள்ளது.
இன்று ஐரோப்பிய தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. சில இடங்களில் இரவு 8 மணி வரை வாக்குச்சாவடிகள் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில முக்கிய முடிவுகளை எடுக்க இந்த அவசர சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.