சென் நதியில் இருந்து சடலம் மீட்பு..!

9 ஆனி 2024 ஞாயிறு 18:25 | பார்வைகள் : 9404
சென் நதியில் இருந்து நேற்று சனிக்கிழமை ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது.
ஏழாம் வட்டாரத்தின் ஈஃபிள் கோபுரத்தின் அருகே Pont d'Iéna பகுதியில் இருந்து இச்சடலம் மீட்கப்பட்டது. பிற்பகல் 2.30 மணிக்கு சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டது. 'இது மேற்சட்டை அணியாத ஆணின் சடலம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சடலத்தின் ஏனைய உடற்பாகங்கள் ஒருமணிநேரத்தின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
சடலம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025