Paristamil Navigation Paristamil advert login

அவதானம் எதிர்வரும் ஜுலை 1ம் திகதி முதல் எரிவாயுவின் விலை மேலும் அதிகரிக்கிறது.

அவதானம் எதிர்வரும் ஜுலை 1ம் திகதி முதல் எரிவாயுவின் விலை மேலும் அதிகரிக்கிறது.

10 ஆனி 2024 திங்கள் 08:47 | பார்வைகள் : 3215


பிரான்சின் எரிவாயு ஆணையம் இன்று விடுத்துள்ள அறிவித்தலின்படி, "முக்கியமாக விநியோக செலவுகள் அதிகரிப்பதால் தாங்கள் எரிவாயுவின் விலையை அதிகரிக்க உள்ளதாக" தெரிவித்துள்ளது. பல மில்லியன் கணக்கான மக்கள் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் விலை அதிகரிப்புக்கு முகம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
ஜூலை மாதத்தின் எரிவாயு கட்டணம் 11.7% சதவீத அதிகரிப்புக்காணும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பை தனியார் வீடுகள் ஏறத்தாழ 10 மில்லியன் பேர் சந்திப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளை எரிவாயுவின் விலை அதிகரிப்பினால் சந்தைப்படுத்தல் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் சந்தர்ப்பம் உண்டு எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்