Paristamil Navigation Paristamil advert login

ஆடிக்கூழ்!

ஆடிக்கூழ்!

16 ஆடி 2024 செவ்வாய் 10:18 | பார்வைகள் : 474


தேவையான பொருட்கள்:

250 கிராம் பனங்கட்டி
150 கிராம் சிவப்பு பச்சை அரிசி
3 மே.க வறுத்த பயறு
3 மே.க வறுத்த உளுத்தம் மா
1 தேங்காய்
½ மே.க மிளகு
தேங்காய்ச் சொட்டுக்கள்
உப்பு
தண்ணீர்

செய்முறை: 

1 கப் அரிசியை குறைந்தது 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அடுத்து தண்ணீர் வடித்து வடியில் வார விடவும். வாரவிட்ட அரிசியை மிக்சியில் அரைத்து, அரிதட்டால் அரித்து எடுக்கவும்( மிளகு சேர்க்க விரும்பினால் அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்).

அரைப்பங்கு அரிசிமாவுடன் உளுத்தம்மா, 1 சிட்டிகை உப்பு  கலந்து வைக்கவும். மீதமுள்ள மாவில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து வைக்கவும் சில்லு தட்டுவதர்க்கு. 
கால்வாசி தேங்காயில் சின்னச் சின்ன சொட்டுகள் வெட்டி வைக்கவும். மீதமுள்ள தேங்காயைத் துருவி அதில் இருந்து 1 ம், 2 ம்,3ம் பால் எடுக்கவும். (1ம் பால் 200 மி.லீ, 2ம் பால் 300 மி.லீ, 3ம் பால் 400 மி.லீ).

ஒரு பாத்திரத்தில் பனங்கட்டியுடன் 200 மில்லிலீட்டர் தண்ணீர் சேர்த்து கரையும் வரை காய்ச்சவும்.

வறுத்த பயற்றை 500 மில்லிலீட்டர் தண்ணீர் விட்டு அவிய விடவும். பயறு அரைப்பங்கு அவிந்ததும் அதனுள் பனங்கட்டிப்பாணியை வடித்து விட்டு அதனுடன் 3 ம் பாலையும் சேர்த்து கொதிக்க விடவும்.

அரிசிமாக்கலவையினுள், கொதித்த பனங்கட்டிப்பாணியை கொஞ்சம் கொஞ்சமாக  விட்டுக் குழைத்து எடுத்து, அதனை சிறிய சில்லுகளாக தட்டவும் அல்லது உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

பயறு அவிந்தவுடன் அதனுடன் தட்டிய சில்லுகள் அல்லது உருட்டிய மா உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து அவியவிடவும். அதனுடன் தேங்காய்ச் சொட்டுகளையும் சேர்த்து அவியவிடவும்.

உளுத்தம்மா கலவையில் 2 ம் பால் விட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்து எடுக்கவும். சில்லுகள் / உருண்டைகள் அவிந்ததும், முதலாம் பால் மற்றும் உளுத்தம்மா கரைசலை விட்டு கைவிடாமல் கிண்டவும். 

கொதித்து இறுகத்தொடங்கவும் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும். ஆடிக் கூழ் தயார்!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்