Paristamil Navigation Paristamil advert login

9 வயது மகளை கொன்ற பின் தாயின் செய்த கொடூரச் செயல்

9 வயது மகளை கொன்ற  பின்  தாயின் செய்த கொடூரச் செயல்

1 புரட்டாசி 2023 வெள்ளி 08:10 | பார்வைகள் : 5153


பிரேசில் நாட்டில் ரூத் ஃபுளோரியானோ என்ற பெண் கணவரை பிரிந்த தனது 9 வயது மகள் மற்றும் ஆண் நண்பருடன் சௌபவுலோ நகரில் வசித்து வந்துள்ளார்.

கடந்தவாரம் வீட்டிற்கு வந்த ஆண் நண்பரின் தாயார் பிரிட்ஜில் வெட்டப்பட்ட உடல் பாகங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் ஃபுளோரியானோவிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கணவரை விவாகரத்து செய்ததால் மகள் அடிக்கடி தன்னுடன் சண்டையிட்டு வந்துள்ளார்.

கடந்த 8ம் திகதி போதையில் மகளை கத்தியால் குத்தி கொன்றதாகவும் ஒப்புகொண்டார்.

மேலும், சடலத்தை அப்புறப்படுத்துவது எப்பிடி என இணையத்தில் தேடிய ஃபுளோரியானோ, உடலை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக சமைத்து அவற்றை அப்புறப்படுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்நிலையில் குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்