Paristamil Navigation Paristamil advert login

இவ்வருடத்தில் 22 அகதிகள் பலி!

இவ்வருடத்தில் 22 அகதிகள் பலி!

20 ஆடி 2024 சனி 10:37 | பார்வைகள் : 1103


இவ்வருடத்தில் இதுவரை பிரித்தானியா நோக்கி சட்டவிரோத பயணம் மேற்கொண்ட 22 அகதிகள் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆறு அகதிகள் கடலில் மூழ்கி பலியாகியிருந்தனர். இவ்வருட ஆரம்பத்தில் மொத்தமாக 22 அகதிகள் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை சென்ற 2023 ஆம் மொத்த ஆண்டில் பதிவான பலி எண்ணிக்கையை விட அதிகமாகும். 

பா-து-கலே மாவட்ட காவல்துறையினர் தெரிவிக்கையில், அகதிகளின் பயணம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாகவும், 2022 ஆம் ஆண்டில் படகு ஒன்றில் சராசரியாக 41 பேர் பயணித்ததாகவும், அந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் 49 ஆக உயர்வடைந்ததாகவும், நடப்பு ஆண்டில் படகு ஒன்றில் 63 பேர் வரை பயணிப்பதாகவும், இந்த எண்ணிக்கை கவலை அளிப்பதாகவும், ஆபத்து நிறைந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்