Paristamil Navigation Paristamil advert login

   ஹெய்டியின் வடக்கு கடற்கரைப் பகுதியில் படகில் தீ - 40க்கும் மேற்பட்டோர் பலி

   ஹெய்டியின் வடக்கு கடற்கரைப் பகுதியில் படகில் தீ - 40க்கும் மேற்பட்டோர் பலி

20 ஆடி 2024 சனி 11:00 | பார்வைகள் : 701


ஹெய்டியின் வடக்கு கடற்கரைப் பகுதியில் படகொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏதிலிகள் பயணித்த படகொன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஏதிலிகளுக்கான முகவரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 41 பேர் வரையில் ஹெய்ட்டியின் கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளதாக அந்த முகவரகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் தீப்பவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்