Paristamil Navigation Paristamil advert login

ரொறன்ரோவில்  கோர விபத்து... பரிதாபமாக பலியாகிய கர்ப்பிணியும் சிசுவும்...!

ரொறன்ரோவில்  கோர விபத்து... பரிதாபமாக பலியாகிய கர்ப்பிணியும் சிசுவும்...!

21 ஆடி 2024 ஞாயிறு 09:36 | பார்வைகள் : 1491


ரொறன்ரோ டவுன்டவுன் குயின் வீதிக்கு அருகாமையில்  கோர விபத்து இடம் பெற்றுள்ளது.

42 வயதான கர்ப்பிணி பெண்ணொருவர் வீதியை கடக்க முயன்ற போது வாகனம் மோதுண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

70 வயதான நபர் ஒருவர் செலுத்திய வாகனத்தில் குறித்த பெண் மோதுண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் பெண் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


வயிற்றில் இருக்கும் சிசுவை உயிருடன் மீட்பதற்கு மருத்துவர்கள் கடின போராட்டத்தை முன்னெடுத்த போதிலும் அது வெற்றி அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.


விபத்தினை மேற்கொண்ட சாரதி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் போலீசாருக்கு அறிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்