Paristamil Navigation Paristamil advert login

ஒரே நாளில் 22,000 மின்னல் தாக்குதல்கள் பதிவு..!

ஒரே நாளில் 22,000 மின்னல் தாக்குதல்கள் பதிவு..!

21 ஆடி 2024 ஞாயிறு 10:01 | பார்வைகள் : 1747


நேற்று ஜூலை 20, சனிக்கிழமை நாடு முழுவதும் கிட்டத்தட்ட 22,000 மின்னல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.

பிரான்சின் மத்திய மற்றும் கிழக்கு மாவட்டங்களுக்கு இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டு நேற்று செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. Haute-Marne மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மின் தடையும் ஏற்பட்டது. 

குறிப்பாக Haute-Marne, Puy-de-Dôme, Allier மற்றும் Loire மாவட்டங்களில் பலத்த இடி மின்னல் தாக்குதல்கள் பதிவானது. நாள் முடிவில் மொத்தமாக 22,000 மின்னல் தாக்குதல் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்