முத்திரைகளின் விலை அதிகரிப்பு..!!

24 ஆடி 2024 புதன் 18:59 | பார்வைகள் : 9075
முத்திரைகளில் விலை வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அதிகரிக்கப்பட உள்ளது. சராசரியாக 6.8% சதவீதத்தினால் இந்த விலை அதிகரிக்கப்பட உள்ளது.
பச்சை நிற முத்திரையின் விலை 1.29 யூரோக்களில் இருந்து 1.39 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது.
20 கிராம் எடையுள்ள தபால்களுக்கு அறவிடப்படும் 5.36 யூரோக்கள் பெறுமதியுள்ள முத்திரை 5.74 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது.
பச்சை முத்திரையானது கடந்த 2 வருடங்களில் 19.8% சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 1.16 யூரோக்களாக அதன் விலை விருந்தது.
இந்நிலையில், இந்த புதிய விலைகளை பிரெஞ்சு தபாலகம் (La Poste) இன்று ஜூலை 25, புதன்கிழமை அறிவித்துள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025