Paristamil Navigation Paristamil advert login

சினிமாவுக்கு வரலனா நயன்தாரா என்ன ஆகிருப்பார் தெரியுமா?

சினிமாவுக்கு வரலனா நயன்தாரா என்ன ஆகிருப்பார் தெரியுமா?

27 ஆடி 2024 சனி 04:55 | பார்வைகள் : 939


கேரளாவில் பிறந்த நயன்தாராவின் உறவினர் ஒருவர், சினிமா சம்பந்தமான தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்பொழுது அவர் மூலமாக நயன்தாராவின் புகைப்படம் சில தயாரிப்பாளர்களிடம் சென்று, அவர்கள் நயன்தாராவிற்கு திரைப்பட வாய்ப்புகளை கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் அதற்கு முன்னதாகவே மலையாள மொழியில் ஒளிபரப்பான சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அவர் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2005ம் ஆண்டு தமிழில் வெளியான "ஐயா" திரைப்படத்தின் மூலம் கோலிவுட் உலகில் அறிமுகமான நயன்தாராவிற்கு, அவருடைய இரண்டாவது திரைப்படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த 21 ஆண்டுகால பயணத்தில் அவர் லேடி சூப்பர் ஸ்டார் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அதுவே அவரது உழைப்புக்கு சான்று.

அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை நயன்தாரா தனது வாழ்க்கையின் ஓட்டம் திரைத்துறைக்கு வந்த பிறகு தலைகீழாக மாறியதாக கூறியிருக்கிறார். ஒரு நாளும் நான் சினிமா துறையில் இவ்வளவு பெரிய உயரத்தை அடைவேன் என்று துளியும் எண்ணியதில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும் தனது லட்சிய கனவு குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார்.

B.Com பட்டதாரியான நடிகை நயன்தாரா CA எனப்படும் chartered accountant படிப்பில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். அவர் சினிமாவில் நடிக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் நிச்சயமாக ஒரு ஆடிட்டராக இருந்திருப்பார் என்று அடிக்கடி அவருடைய உறவினர்கள் கூட சொல்வார்கள் என்று நயன்தாரா கூறுகிறார். திரை துறைக்காக தனது சிஏ கனவை தவிர்த்து, இன்று மாபெரும் நடிகையாகியுள்ளார் நயன்தாரா.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்