நிடி ஆயோக் கூட்டத்தில் இருந்து மம்தா வெளிநடப்பு !

27 ஆடி 2024 சனி 08:45 | பார்வைகள் : 6532
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிடி ஆயோக் கூட்டத்திலிருந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார். 5 நிமிடங்கள் கூட என்னை பேச அனுமதிக்கவில்லை என்றார்.
பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் அமைப்பின் 9 வது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜ., மற்றும் அக்கட்சி கூட்டணி ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் 8 பேர் புறக்கணித்தனர். மம்தா பானர்ஜி மட்டும் கலந்து கொண்டார்.
முன்னதாக அவர், கூட்டத்தில் தன்னை பேச அனுமதிக்கவில்லை எனில் கூட்டத்தை புறக்கணிப்பேன் எனக்கூறியிருந்தார். அதன்படி, இன்று டில்லியில் நடந்த நிடி ஆயோக் கூட்டம் கூடியது. சிறிது நேரத்தில் அவர் வெளிநடப்பு செய்தார்.
நிருபர்களிடம் மம்தா கூறியதாவது: நிடி ஆயோக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில் நான் மட்டுமே கலந்து கொண்டேன். ஆனால், கூட்டத்தில் என்னை 5 நிமிடம் கூட பேச அனுமதிக்கவில்லை. இதனை கண்டித்து வெளிநடப்பு செய்தேன். என்னை பேசுவதற்கு அனுமதி மறுத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய அரசு அவமதிக்கிறது. மத்திய பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது. இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1