இஸ்லாமிய கலாச்சார உடையில் இறுக்கம் காட்டும் ஜனாதிபதி மக்ரோன் - அனுமதி இல்லை என்பதில் உறுதி

2 புரட்டாசி 2023 சனி 07:00 | பார்வைகள் : 14197
பாடசாலைகளில் இஸ்லாமிய கலாச்சார உடை (அபாயா) அணிவதற்கு அனுமதிஇல்லை என்பதை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உறுதி செய்துள்ளார். அவ்விடயத்தில் மிக இறுக்கமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர்தெரிவித்துள்ளார்.
‘பாடசாலைகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் என எவரும் அபாயா அணிந்து செல்லஅனுமதி இல்லை!’ என கல்வி அமைச்சர் கேப்ரியல் அத்தால் கடந்தவியாழக்கிழமை அறிவித்தார். உடனடியாக தீ போல் பரவி விமர்சனங்களுக்குஉள்ளான இந்த முடிவு தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதிஇம்மானுவல் மக்ரோன் கருத்து வெளியிட்டார். அவர் தெரிவித்ததில், “அதில் ஒருஅர்த்தம் இருப்பது எனக்கு தெரிகிறது. பலர் குடியரசு திட்டங்களுக்கு சவாலாகஇருக்கின்றனர். எனவே நாம் அதில் தலையிடவேண்டும். மதங்களை பிரதிபலிப்பதுஏற்றுக்கொள்ளத்தக்கது தான். ஆனால் சகிப்புத்தன்மையை சீண்டிப்பார்க்கும்நடைமுறைகளை நாம் தடுத்தாக வேண்டும். பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்இவ்விடயத்தில் அழுத்தத்தை எதிர்கொள்ள நாம் அனுமதிக்கமாட்டோம்.” எனஜனாதிபதி தெரிவித்தார்.
நேற்றைய தினம் Orange (Vaucluse) நகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தஜனாதிபதி மக்ரோன், அங்கு வைத்தே இதனைத் தெரிவித்திருந்தார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1