இலங்கை கடவுச்சீட்டில் ஏற்படவுள்ள மாற்றம்
1 ஆவணி 2024 வியாழன் 16:16 | பார்வைகள் : 1288
இலங்கை கடவுச்சீட்டில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
புதிய அம்சங்களைக் கொண்ட இலங்கைக் கடவுச்சீட்டுக்கள் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய சாதாரண, உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் 3 வெவ்வேறு நிறங்களுடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.