Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

லெபனானில் இருந்து  வெளியேறுமாறு  அவுஸ்திரேலியர்களுக்கு அறிவிப்பு

லெபனானில் இருந்து  வெளியேறுமாறு  அவுஸ்திரேலியர்களுக்கு அறிவிப்பு

2 ஆவணி 2024 வெள்ளி 05:38 | பார்வைகள் : 6190


அமெரிக்காவும் பிரிட்டனும் தங்கள் நாட்டு மக்களிடம்  லெபனானை விட்டு வெளியேறுமாறு கோரிக்கையை விடுத்துள்ளன.

இந்நிலையில் அவுஸ்திரேலியர்கள் லெபனானில் இருந்து விரைவில் வெளியேற வேண்டும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அமெரிக்காவும் பிரிட்டனும் தங்கள் நாட்டு மக்களிடம் இதே கோரிக்கையை விடுத்துள்ளன.

இந்நிலையில் சுமார் 15,000 அவுஸ்திரேலியர்கள் லெபனானில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, லெபனான் வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 500,000 பேர் ஆஸ்திரேலியாவில் வசிப்பதாக தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வர்த்தக‌ விளம்பரங்கள்