Paristamil Navigation Paristamil advert login

யாழில்  மயங்கி விழுந்தவர் மரணம்

யாழில்  மயங்கி விழுந்தவர் மரணம்

2 ஆவணி 2024 வெள்ளி 13:42 | பார்வைகள் : 1496


யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

ஈச்சமோட்டை பகுதியை சேர்ந்த கபிரியேற்பிள்ளை கியாமர் (வயது 75) என்பவரே உயிரிழந்துள்ளார். 

கடந்த 27ஆம் திகதியன்று இடம்பெற்ற  பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றிக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை வீதியில் திடீரென மயங்கி சரிந்துள்ளார். 

வீதியில் சென்றவர்கள் அவரை மீட்டு யாழ்,போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி   வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்