Paristamil Navigation Paristamil advert login

மோடி தலைமையில் பா.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் கூட்டம்; பார்லி.,யில் பதிலடி கொடுக்க ஆயத்தம்

மோடி தலைமையில் பா.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் கூட்டம்; பார்லி.,யில் பதிலடி கொடுக்க ஆயத்தம்

2 ஆடி 2024 செவ்வாய் 05:43 | பார்வைகள் : 382


தேசிய ஜனநாயக கூட்டணியின் பார்லி., கூட்டம் டில்லியில் இன்று (ஜூலை 02) நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு பா.ஜ., எம்.பி.,க்கள், கூட்டணி தலைவர்கள் வரவேற்பு அளித்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் லோக்சபாவில் நேற்று (ஜூலை 1) எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்று, பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.,வினரை விமர்சித்து பேசினார். இன்று விவாதத்துக்கு பதிலளித்து இரு அவைகளிலும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அதற்கு முன்னதாக பார்லி., வளாகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் பங்கேற்றனர்.

3வது முறையாக பதவியேற்றப்பின் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு எம்.பி.,க்கள் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். இன்று இரு அவைகளிலும் பதிலளிக்க உள்ள பிரதமர் மோடியின் உரையில் இடம்பெற உள்ள அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக நேற்று ராகுல் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்