Paristamil Navigation Paristamil advert login

யாழில் முதியவரை கழுத்து நெரித்து படுகொலை செய்த இளைஞன் 

யாழில் முதியவரை கழுத்து நெரித்து படுகொலை செய்த இளைஞன் 

2 ஆடி 2024 செவ்வாய் 15:11 | பார்வைகள் : 451


முதியவர் ஒருவரை கழுத்து நெரித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பகுதியை சேர்ந்த 63 வயதுடைய முதியவர் படுக்கையில் உயிரிழந்துள்ளதாக முதியவருடன் வசித்து வந்த இளைஞன் தெரிவித்துள்ளார். 

இறப்பில் சந்தேகம் காணப்பட்டமையால் , சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதான வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. 

உடற்கூற்று பரிசோதனையில் முதியவர் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து , கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். 

இந்நிலையில் முதியவருடன் வசித்து வந்த இளைஞனை கைது செய்த போலீசார் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்