Paristamil Navigation Paristamil advert login

Yvelines : மூவர் மீது கத்திக்குத்து தாக்குதல்..!

Yvelines : மூவர் மீது கத்திக்குத்து தாக்குதல்..!

3 ஆடி 2024 புதன் 14:15 | பார்வைகள் : 1456


Bois-d'Arcy (Yvelines) நகரில் நேற்று இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.  

16, 18 மற்றும் 22 வயதுடைய மூவரே கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர். Avenue Jean-Jaurès வீதியில் இருந்து இரவு 11 மணி அளவில்  அவசரப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் படி, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர். அங்கு மூவர் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் தரையில் கிடந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

தாக்குதலுக்குரிய காரணம் குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை. யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்