Paristamil Navigation Paristamil advert login

ஓய்வை அறிவித்த காற்பந்து ஜாம்பவான் ரொனால்டோ - கவலையில் ரசிகர்கள்

ஓய்வை அறிவித்த காற்பந்து ஜாம்பவான் ரொனால்டோ - கவலையில் ரசிகர்கள்

4 ஆடி 2024 வியாழன் 07:45 | பார்வைகள் : 375


கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஆறாவது யூரோ போட்டியான ஸ்லோவேனியாவுக்கு எதிராக போர்த்துகல் வெற்றி பெற்று, பிரான்சுக்கு எதிராக காலிறுதிக்கு முன்னேறியதையடுத்து ஐரோப்பிய போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நடைபெற்றுவரும் (EURO) யூரோ கிண்ணத்தொடர் தான் தனது இறுதி தொடர் என கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “இதுவே எனது கடைசி ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடராகும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை, கால்பந்து விளையாட்டின் மீது எனக்கு இருக்கும் ஆர்வமும் உற்சாகமும் அப்படியே தான் இருக்கிறது.

எனது ரசிகர்களும், குடும்பத்தினரும் என் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையையும் பாசத்தையும் கண்டு நான் உற்சாகம் அடைகிறேன்.

 மேலும், எனது இந்த செயல்பாட்டின் பிரதான நோக்கமே அனைவரையும் மகிழ்விப்பது தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்