Paristamil Navigation Paristamil advert login

தென்னாப்பிரிக்காவில் குடியிருப்பொன்றில் பயங்கர தீ விபத்து! 73 பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் குடியிருப்பொன்றில் பயங்கர தீ விபத்து! 73 பேர் பலி

31 ஆவணி 2023 வியாழன் 10:38 | பார்வைகள் : 5508


தென்னாப்பிரிக்காவில், அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தில் குழந்தை உட்பட 73 பேர் வரை உயிரிழந்துள்ள விடயம் பெரும் துயரத்தை உருவாக்கியுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோஹன்னஸ்பர்கில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடம் ஒன்றில் தீப்பற்றியுள்ளது.

தரைத்தளத்தில் தீப்பற்றி ஆக்ரோஷமாக எரியத் துவங்கியதால் ஏராளமானோர் அந்தக் கட்டிடத்திலிருந்து வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கியுள்ளார்கள்.

தீயணைப்பு வீரர்கள் ஒரு பக்கம் வேகவேகமாக மக்களைக் காப்பாற்றும் பணியிலும், மறுபக்கம் தீயை அணைக்கும் பணியிலும் இறங்கியுள்ளார்கள்.

அந்தக் கட்டிடத்தில் புலம்பெயர்ந்தோர் பலர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் நிலையில், ஏழு சிறுவர்கள், அவர்களில் ஒரு வயது குழந்தை ஒன்று உட்பட, 73 பேர் வரை பலியாகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்களில் சிலர், தீயிலிருந்து தப்ப ஜன்னல்கள் வழியாக குதித்ததில் உயிரிழந்துள்ளார்கள்.

மேலும், தீயில் 52 பேர் காயமடைந்துள்ள நிலையில், காயமடைந்தவர்களும், புகையால் பாதிக்கப்பட்டவர்களும் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.


தீவிபத்து தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்