Paristamil Navigation Paristamil advert login

சூதாட்டத்தில் €117,283 யூரோக்கள் வென்ற நபர்..!!

சூதாட்டத்தில் €117,283 யூரோக்கள் வென்ற நபர்..!!

9 ஆடி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 3188


நபர் ஒருவர் சூதாட்டம் ஒன்றில் ஈடுபட்டு €117,283 யூரோக்கள் வென்றுள்ளார்.

Pontault-Combault நகரில் இடம்பெறும் குதிரைப்பந்தயம் ஒன்றின் மீது 'பெட்' கட்டி குறித்த நபர் இந்த பணத்தொகையை வென்றுள்ளார். குறித்த நகரில் Quinté+ எனும் நிறுவனம் குதிரைப்பந்தய சூதாட்டத்தை மேற்கொண்டு வருவது அறிந்ததே. அங்கு ஜூன் 30 ஆம் திகதி இடம்பெற்ற சூதாட்டத்திலேயே இந்த பரிசுத்தொகையை ஒருவர் வென்றுள்ளார்.

Seine-et-Marne மாவட்டத்தில் €100,000 யூரோக்களுக்கு அதிகமாக பெற்றுக்கொண்ட நான்காவது நபர் இவராவார். அதேவேளை, இதே மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த மே மாதத்தில் €294,721 யூரோக்களை இதே சூதாட்டத்தில் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்