பெண் காவல்துறை வீரர் அடித்துக் கொலை

31 ஆவணி 2023 வியாழன் 14:42 | பார்வைகள் : 18462
பெண் காவல்துறை வீரர் ஒருவர் baseball மட்டையினால் அடித்து கொலைசெய்யப்பட்டார்.
La Croix-de-la-Rochette (Savoie) நகரில் இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை(ஓகஸ்ட் 31) அதிகாலை இடம்பெற்றுள்ளது. பெண் காவல்துறை வீரர் ஒருவர்வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நிலையில், கலை 9.30 மணி அளவில்அவரை நெருங்கிய நபர் ஒருவர் குறித்த பெண் காவல்துறை வீரரை தாக்கியுள்ளார். மறைந்திருந்து Baseball மட்டையினால் தாக்கியதில் நிலைகுலைந்த அவர், சம்பவஇடத்திலேயே மயங்கி விழுந்தார்.
பின்னர் மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்குகொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பலியானதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய நபர் தேடப்பட்டு வருகிறார். 60 வயதுடைய ஒருவரே தாக்குதல்நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025