Paristamil Navigation Paristamil advert login

யாழில். மரணச்சடங்குக்கு சென்று விட்டு வீடு திரும்பியவர் மரணம்

யாழில். மரணச்சடங்குக்கு சென்று விட்டு வீடு திரும்பியவர் மரணம்

9 ஆடி 2024 செவ்வாய் 13:24 | பார்வைகள் : 1074


யாழ்ப்பாணத்தில் மரண சடங்கில் கலந்து கொண்டு விட்டு , வீடு திரும்பிக்கொண்டிருந்தவர் விபத்தில் சிக்கி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

வடமராட்சி அல்வாய் கிழக்கை சேர்ந்த சுப்பிரமணியம் சிவபாதசுந்தரம் (வயது 79) என்பவரே உயிரிழந்துள்ளார் 

பருத்தித்துறை பகுதியில் கடந்த 05ஆம் திகதி தனது மைத்துனரின் மரண சடங்கில் கலந்து கொண்டு , தகன கிரியைக்காக சூப்பர் மட மயானத்திற்கு சென்று விட்டு , தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது வியாபாரி மூலை பகுதியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானர்.

விபத்தில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்