Paristamil Navigation Paristamil advert login

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ...

 மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ...

10 ஆடி 2024 புதன் 13:57 | பார்வைகள் : 558


வாழ்வில் உயர்வும் தாழ்வும், மகிழ்ச்சியும் துக்கமும் சேர்ந்தே வரக்கூடியது. தினசரி புதுப்புது சவால்களை சந்தித்து எதிர் நீச்சல் போடும் நமக்கு, மன அமைதி அத்தனை எளிதாக கிடைப்பதில்லை. இன்றைய பிஸியான வாழ்க்கையில், மக்கள் தங்கள் மன ஆரோக்கியத்தைப் பற்றி முற்றிலும் மறந்துவிடுகிறார்கள், இது மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது, இது ஒரு பொதுவான பிரச்சனையாக புறக்கணிக்கப்படுவதால் இது மனச்சோர்வு போன்ற கொடிய நோய்களுக்கு வழிவகுக்கிறது.

ஒரு நல்ல புத்தகம் 100 நண்பர்களுக்கு சமம் என்பது பழமொழி. பெரிய மனிதர்கள் எப்போதுமே புத்தகங்கள் படிப்பதையே வலியுறுத்தி வந்துள்ளனர், புத்தகங்களை வாசிப்பது குழந்தைகளின் அறிவுசார் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். புத்தகம் வாசிப்பு என்பது இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு ஆர்வம் இல்லாத ஒரு பொழுது போக்கவே மாறிவிட்டது. குழந்தைகள் தொடர்ந்து புத்தகம் படிப்பதன் மூலம் அவர்களின் எண்ண ஒட்டம் சீராக இருக்கும் என்பதைத் தாண்டி புத்திக் கூர்மை, நினைவாற்றல் மேம்படுதல் போன்ற பண்புகளும் தானே வளரும் என்கிறார்கள் அறிஞர்கள். எனவே ஒரு நல்ல புத்தகத்தை அவர்களுக்கு பரிசளியுங்கள்.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம், ஒரு நபர் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, மன ஆரோக்கியத்தையும் பெற முடியும். உடற்பயிற்சி செய்வதால் உடலில் இருந்து டோபமைன் போன்ற ஹார்மோன்கள் வெளியாகும், இது மனச்சோர்வு, பதட்டம் போன்றவற்றுக்கு இயற்கை மருந்தாகும். எனவே, வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் கண்டிப்பாக உடற்பயிற்சி மற்றும் யோகா கிட்களை வீட்டிலேயே வாங்கி அதனை தினசரி பயன்படுத்துங்கள். மேலும் உங்களின் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு வாங்கி கொடுங்கள்.

மன ஆரோக்கியத்திற்கு நிம்மதியான தூக்கம் இன்றியமையாதது ஆகும். நிம்மதியான உறக்கத்திற்கு வசதியான இடத்தில் உறங்குவது முக்கியம். எனவே நீங்கள் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், உங்கள் படுக்கையறைக்கு பிங்க், நீலம் அல்லது பச்சை வண்ணத்தில் உள்ள பெட் விளக்குகளை வாங்கவும். எனவே உங்கள் அன்புக்குரியவர்களில் யாராவது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் படுக்கையறைக்கு இருக்கும் வண்ண பெட்ரூம் விளக்குகள் அவர்களின் மன அழுத்தம் பிரச்சைனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

சாக்லேட் பொதுவாக மூட் பூஸ்டர் என்று அழைக்கப்படுகிறது, அதில் அதிக சர்க்கரை உள்ளடக்கம் இருப்பதால், அதிகப்படியான சாக்லேட் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஏதாவது பரிசளிக்க விரும்பினால், டார்க் சாக்லேட் வாங்குவது ஒரு சிறந்த நடவடிக்கையாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண விரும்பினால் டார்க் சாக்லேட்டை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். டார்க் சாக்லேட் மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும், டார்க் சாக்லேட் ஒரு அருமையான மன அழுத்த நிவாரணியாகும். இது இயற்கையில் மிகவும் சுவையான மருந்து என்றும் பொதுவாக கூறப்படுகிறது.

அறிவியலின் படி, தினமும் சிறிது நேரம் பசுமையைப் பார்ப்பது மனதை அமைதிப்படுத்துகிறது. இது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் எனவே உங்கள் அன்புக்குரியவர்களில் யாராவது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு சில அழகான பூக்களை பரிசளிக்கவும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்