Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்­தானில்  சந்­தையில் பாரிய தீ விபத்து

பாகிஸ்­தானில்  சந்­தையில் பாரிய தீ விபத்து

11 ஆடி 2024 வியாழன் 09:29 | பார்வைகள் : 1044


பாகிஸ்தான் தலை­நகர் இஸ்­லா­மாத்­தி­லுள்ள வாராந்த சந்­தை­யொன்றில் நேற்று பர­விய தீயினால் குறைந்­த­பட்சம் 500 கடைகள் தீக்­கி­ரை­யா­கி­யுள்­ளன.

'இத்வார் பஸார்' என அழைக்­கப்­படும் இந்த வாராந்த சந்­தையில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

சுமார் 25 ஏக்கர் பரப்­ப­ளவில் பரந்­தள்ள இந்த வாராந்த சந்­தையில் 2,700 இற்கும் அதி­க­மான கடைகள் நடத்­தப்­பட்­டு­ வந்­தன.

இச்­சந்­தையின் ஆடைகள் மற்றும் பாத­ணிகள் பிரிவில் நேற்று தீ ஏற்­பட்­ட­தா­கவும், விரைவில் ஏனைய பகு­தி­க­ளுக்கும் இத்தீ பர­வி­ய­தா­கவும் அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

தீயை அணைப்­ப­தற்­காக 31 தீய­ணைப்பு வாக­னங்கள் அனுப்­பப்­பட்­ட­தாக அதி­காரி ஒருவர் தெரி­வித்­துள்ளார். பாகிஸ்தான் கடற்­படை மற்றும் விமா­னப்­ப­டை­யி­னரின் உத­வி­களும் கோரப்­பட்­டன.

இத்­தீ­யினால் உயி­ரி­ழப்பு எதுவும் ஏற்­பட்­ட­தாக அறி­விக்­கப்­ப­ட­வில்லை. எனினும் சுமார் 500-700 கடைகள் தீக்­கி­ரை­யாக்­கி­யுள்­ள­தாக த-லை­ந­கர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் தலைவர் அலி ரந்­தாவா தெரி­வித்­துள்ளார்.

இத்­தீயை அணைப்­ப­தற்கு அனைத்து வளங்­க­ளையும் பயன்­ப­டுத்­து­மாறு உள்­துறை அமைச்சர் மோஷின் நக்வி உத்­த­ர­விட்டார்.

இத்தீ பர­வி­ய­மைக்­கான கார­ணத்தை கண்­ட­றி­யவும் சேதங்­களை மதிப்­பீடு செய்­யவும் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக இஸ்­லா­மாபாத் மாவட்ட நிர்­வாகம் தெரி­வித்­துள்­ளது.

பாகிஸ்­தானின் இஸ்­லா­மாபாத் நகரில், கடந்த மாதம் ஏற்­பட்ட தீயினால் குறைந்­த­பட்சம் 80 கடைகள் தீக்கிரையாகிருந்தன. 

அவற்றில் பெரும்பாலானவை பயன்படுத் தப்பட்ட பொருட்களை விற்பனை செய் யும் கடைகளாகும். அச்சம்பவத்தில் மூவர் காயமடைந்திருந்தனர்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்