Paristamil Navigation Paristamil advert login

யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

13 ஆடி 2024 சனி 13:28 | பார்வைகள் : 666


யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் சேவை மீண்டும் எதிர்வரும் ஆகஸ்ட் ஆரம்பமாகுமென தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம்  புனரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்ட மாஹோ-  அநுராதபுரம் இடையிலான ரயில் பாதை பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

தற்போது புதிய புகையிரத பாதை மாஹோ புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பழைய ரயில் பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த வீதி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி  திறந்து வைக்க வாய்ப்புள்ளது.

முன்னதாக இந்திய உதவியுடன் மாஹோ -வவுனியா – காங்கேசன்துறை போக்குவரத்து வசதிக்காக தண்டவாளங்கள் திருத்தப்பட்டதுடன் தற்போது மாஹோ – அனுராதபுரம் வரை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்