Paristamil Navigation Paristamil advert login

யாழில்.சகோதரனுடன் ஆலயத்திற்க்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த கதி

யாழில்.சகோதரனுடன் ஆலயத்திற்க்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த கதி

17 ஆவணி 2024 சனி 14:04 | பார்வைகள் : 899


யாழ்ப்பாணத்தில் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற யுவதி விபத்து சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த நேசராசா பானுசா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். 

கடந்த 11ஆம் திகதி பொன்னாலையில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு சென்று விட்டு , சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை , மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்துள்ளார். 

அதில் காயமடைந்தவரை சங்கானை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் , நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்