Noisy-le-Sec : உணவகத்தில் கலவரம்..! - நால்வர் கைது..!
19 ஆவணி 2024 திங்கள் 09:17 | பார்வைகள் : 2216
Noisy-le-Sec நகரில் உள்ள பீட்சா விற்பனை செய்யும் உணவகம் ஒன்றில் கலவரத்தில் ஈடுபட்ட நால்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஓகஸ்ட் 18, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள பீட்சா உணவு விற்பனை செய்யும் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இருவர், ஒருவரை ஒருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டதாக அறிய முடிகிறது. கதிரை மேசைகளை உடைத்து நொருக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவ்விருவரையும் கைது செய்தனர். குறித்த உணவகம் முழுவதும் சோதனையிடப்பட்டது. மேலும் அங்கிருந்த மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மொத்தமாக நால்வர் கைது செய்யப்பட்டு, காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.