Paristamil Navigation Paristamil advert login

யாழில் வேலைக்கு சென்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு

யாழில் வேலைக்கு சென்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு

19 ஆவணி 2024 திங்கள் 09:51 | பார்வைகள் : 1082


வேலைக்கு சென்ற இளைஞன் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு , உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம்,  நீர்வேலி பகுதியை சேர்ந்த தவராசா ரகுமாதவா எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். 

வீட்டில் இருந்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்கு சென்றார்.

இந்த நிலையில் , வேலைத்தளத்தில் நெஞ்சு வலிப்பதாக கூறியதை அடுத்து சக தொழிலாளர்கள் அவரை கோப்பாய் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற வேளை , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். 

உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது . 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்