Paristamil Navigation Paristamil advert login

ஒழுக்க விழுமியங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும்

ஒழுக்க விழுமியங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும்

18 ஆடி 2023 செவ்வாய் 07:06 | பார்வைகள் : 2628


ஒரு நாட்­டின் முன்­னேற்­றத்­திற்கு ஒழுக்கம் உள்ள சமு­தா­யத்தை உரு­வாக்­கு­வது முக்­கி­ய­மாகும். ஒழுக்­க­முள்ள சமு­தா­யத்தை உரு­வாக்­க­ வேண்டிய பொறுப்பு எல்­லாத்­துறைத் தலை­வர்­க­ளி­னதும் பொறுப்­பாகும். ஒழுக்கம் உள்ள சமு­தா­யத்தை உரு­வாக்­கு­வ­தற்கு வழி­காட்­டி­க­ளாக இருக்­கின்ற அர­சியல், மதத் தலை­வர்கள் ஒழுக்கச் சீர்­கே­டு­களில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தனை இலங்­கையில் தொடர்ச்­சி­யாக காணக் கூடி­ய­தாக இருக்­கின்­றது.

துறை­சார்ந்த தலை­வர்­க­ளிடம் மட்­டு­மல்ல சார­தி­க­ளி­டமும் ஒழுக்­க­மின்மை அதி­க­ரித்துக் கொண்டு செல்­கின்­றது. அவர்கள் வாக­னங்­களை மது போதை­யிலும், அதிக வேக­மாவும் செலுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதனால் மிக மோச­மான விபத்­துக்கள் ஏற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. பெறு­ம­தி­யான மனித உயிர்கள் பலி­யாகிக்  கொண்­டி­ருக்­கின்­றன.

மனி­தர்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே மதங்கள் தோற்றம் பெற்­றன. அத்­த­கைய மதங்­களைப் போதிக்­கின்ற ஒரு சில தலை­வர்­க­ளிடம் ஒழுக்­க­  வி­ழு­மி­யங்கள் இல்­லாமல் இருப்­பது பலத்த அவ­ம­ரி­யா­தையை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றன. கடந்த காலங்­களில் இத்­த­கை­ய­வர்­கள்தான் இனங்­க­ளி­டையே பிரி­வு­களை ஏற்­ப­டுத்தி தாம் சார்ந்த இனத்­தினர் மாத்­தி­ரமே நாட்டில் வாழத் தகு­தி­யா­ன­வர்கள் என்ற விஷக் கருத்­துக்­களை மக்­க­ளி­டையே பரப்பி நாட்டை பல வழி­க­ளிலும் சீர­ழித்­தனர். இத்­த­கைய சிந்­த­னை­யு­டை­ய­வர்­களின் பின்னால் அர­சி­யலில் ஒழுக்கம் பிழைத்­த­வர்களும் செயற்­பட்டுக் கொண்­டி­ருந்­தமை பகி­ரங்­க­மான உண்­மை­யாகும்.

இன­வா­திகள் மூல­மாக தேர்தல் வெற்­றி­களை மாத்திரம் குறி வைத்துச் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் அர­சி­யலில் ஒழுக்கம் பிழைத்­த­வர்கள் இந்த நாட்டை மாறி­மாறி ஆட்சி செய்­த­மை­யி­னால்தான் நாட்டில் ஊழல், மோச­டிகள் என்­று­மில்­லா­த­வாறு அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கின்­றன. இத்­த­கைய செயற்­பா­டு­களைச் செய்­த­வர்­களை பாது­காத்துக் கொள்­வ­தற்­கா­கவே காலத்­திற்கு காலம் அர­சாங்­கமும் செயற்­பட்டு வந்­துள்­ளன.

அர­சியல் தலை­வர்­களைப் பொறுத்­த­வ­ரையில் அவர்­க­ளு­டைய மேடைப்­பேச்­சுக்கும் அவர்­க­ளு­டைய செயல்­பாட்­டுக்கும் எந்த ஒரு தொடர்­பையும் நாம் காண முடி­யாது. எந்த சமூ­கத்தை சேர்ந்த அர­சி­யல்­வா­தி­யாக இருந்­தாலும் பெரும்­பா­லான அர­சி­யல்­வா­திகள் ஊழல்­வா­தி­க­ளா­கவே இருக்­கின்­றார்கள். அர­சி­யல்­வா­தி­களும், உயர்­அ­தி­கா­ரி­களும் செய்த பாரிய ஊழல் கார­ண­மா­கத்தான் நாடு மிக மோச­மான பொரு­ளா­தார பின்­ன­டைவை கண்­டி­ருக்­கின்­றது. இந்த பொரு­ளா­தார பின்­ன­டைவை சரி செய்­வ­தற்­காக இன்­றைய அர­சாங்கம் மக்கள் மீது பாரிய வரிச் சுமை­களை விதித்துள்ளது.  

ஊழல் புரிந்­த­வர்­களை சட்­டத்­திற்கு முன் நிறுத்தி அவர்­க­ளிடம் இருந்து பணத்தை மீள அற­வீடு செய்­யாமல், நாட்டு மக்­களை பெரும் நெருக்­க­டிக்குள்ளாக்கி கொண்­டி­ருப்­பது மேலும் மேலும் மோச­மான நிலைமையே  ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அது மட்­டு­மல்­லாமல் நாட்டு மக்­க­ளி­டையே ஒரு வெறுப்புத் தன்­மையும் காணப்­ப­டு­கின்­றது. இந்த சூழ்­நி­லையில் நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டு­மாயின், நிதி ரீதி­யான ஒழுக்கம் அவ­சியம் என ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

பொது­வாக நிதி விட­யத்தில் அதிகமான மோச­டி­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளாக அர­சி­யல்­வா­தி­களும், உயர் அதி­கா­ரி­களும்தான் காணப்­ப­டு­கின்­றார்கள். ஆனால், அவர்­க­ளுக்கு எதி­ராக எந்த ஒரு சட்ட நட­வ­டிக்­கையும் முறை­யாக எடுக்­கப்­ப­ட­வில்லை என்­பதே நாட்டை உண்­மை­யாக நேசிக்­கின்­ற­வர்­களின் கருத்­தாக இருக்­கின்­றது. நிதி மோச­டி­க­ளிலும், இலஞ்சம் போன்ற செயற்­பா­டு­களிலும் ஈடு­பட்ட அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும், உயர் அதி­கா­ரி­க­ளுக்கும் எதிராக சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டாமல் இருக்­கின்ற நிலையில் எவ்­வாறு நாட்டில் நிதி ரீதி­யான ஒழுக்­கத்தை ஏற்­ப­டுத்த முடியும்.

இவ்­வாறு தலை­வர்கள் முதல் சாதா­ரண மக்கள் வரையில்  ஒழுக்­க­வி­ழுமி­யங்கள் தேய்­வ­டைந்து கொண்டு வரு­கின்­ற­மையால் எதிர்­கா­லத்தில் மிக மோச­மான பின்­ன­டை­வுகள் எல்­லாத்­து­றை­க­ளிலும்  ஏற்­படும்.

அண்­மையில் பௌத்த விகாரை ஒன்றில் இரண்டு பெண்­க­ளுடன் தேரர் ஒருவர் தவ­றான முறையில் இருந்­துள்ளார்.  இதில் சம்­பந்­தப்­பட்ட இரு பெண்­க­ளையும் நிர்­வாண நிலையில் வீடியோ எடுத்த ஒரு கும்பல் அதனை சமூக வலைத்­த­ளங்­களில் பகிர்ந்­துள்­ளனர்.   குற்றச் செயல்­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இதில் யாரும் மாற்றுக் கருத்­துக்­களை முன் வைக்க முடி­யாது. சட்டம் சக­ல­ருக்கும் சம­மாக செயற்­பட வேண்டும். ஆனால், இலங்­கையில் சட்டம் சக­ல­ருக்கும் சமம் என்­பது பேச்­ச­ள­வி­லேயே இருக்­கின்­றது.

இதே வேளை, அவ்­வா­றான நட­வ­டிக்­கைகளில்  ஈடு­பட்­ட­வர்­களை வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்­களில் பரப்­புரை செய்­வது ஒழுக்­க­மான செயலாகாது. அது ஏற்­றுக்­கொள்ள முடி­யாத ஒன்­றா­கும்.   ஏனெனில் குற்றம் செய்­த­வரை தண்டிக்­கின்ற அதி­காரம் நீதி­மன்­றத்­திற்கே இருக்­கின்­றது. சாதா­ரண மக்கள் சட்­டத்தை கையில் எடுத்துச் செயற்­பட முடி­யாது. 2010ஆம் ஆண்டின் பின்னர் ஒரு சில தேரர்­களும், இன­வா­தி­களும் சட்­டத்தை கைகளில் எடுத்து முஸ்­லிம்­களின் மீது தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

ஒரு தனி­நபர் செய்த ஒழுக்கக் கேடான செயலை சமூக வலைத்­த­ளங்­களில் பகிரும் போது, எந்தத்தவறும் செய்யாத அந்த நபர் சார்ந்­துள்ள குடும்­பத்­தினர் அவ­மா­னப்­படுத்தப்ப­டுகின்ற நிலை ஏற்­ப­டு­கின்­றது. இது மன்­னிக்க முடி­யாத குற்­ற­மா­கவே பார்க்க வேண்டும். ஒரு­வரின் மானம் அவரின் உயிரை விட மேலா­னது.

ஆகவே எதிர்­கால சந்­த­தியினரை    கருத்தில் கொண்டு இவ்­வா­றான மோச­மான காணொளிகளை சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வேற்றம் செய்­வ­தற்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அதே வேளை ஒழுக்க விழுமி­யங்­களை கடைப்­பி­டித்து நடக்­கா­த­வர்கள் அவர்கள் எத்­துறை சார்ந்த தலை­வர்களாக இருந்­தாலும் அவர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்­கைகள் எடுக்கப்பட வேண்டும்.

ஏனென்றால் இன்று நாடு ஒழுக்க ரீதி­யாக பல்­வேறு வகையில் பின்­ன­டை­வு­களை கண்டு வரு­கின்­றது. ஆகவே சட்­டமும் ஒழுங்கும் பேணப்­பட வேண்டும். சட்­டமும் ஒழுங்கும் பேணப்­ப­டு­கின்ற போதுதான் ஒழுக்கம் உள்ள ஒரு  சமு­தா­யத்தை உரு­வாக்க முடியும். அத்­த­கைய சமு­தா­யத்­தி­னால்தான் நாட்டை முன்­னேற்ற முடியும்.

ஒழுக்­க­முள்ள சமு­தா­யத்தை உரு­வாக்­கி­னால்தான் ஒழுக்­க­மான நாட்டை உரு­வாக்­கலாம்.  பொரு­ளா­தார ரீதியில் முன்­னேற்­ற­க­ர­மான ஒரு நாடா­கவும்,   ஒற்­று­மை­ மற்றும் ஐக்­கி­யமான   ஒரு நாடா­கவும் மாற்­றலாம். இவ்­வா­றான குற்­றச்­செ­யல்­களில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­களை பாது­காக்க முற்­ப­டு­கின்ற பொழுது அது வேறு விப­ரீ­தங்­களை ஏற்­ப­டுத்தும் என்­பதை நாம் அண்­மைக்­கா­ல­மாக அவ­தா­னித்துக் கொண்­டி­ருக்­கின்றோம்.

இதே வேளை இவ்­வா­றான குற்­றச்­செ­யல்களில் ஈடுபட்­ட­வர்­க­ளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதே வேளை தமிழ், முஸ்லிம் சகோதரர்கள் இந்த காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதிலிருந்து விடுபட வேண்டும். சிறுபான்மையினராகிய நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

அரசியல் தலைவர்கள் ஒழுக்கம் உள்ளவர்களாக நடக்கின்ற போது ஏனைய விடயங்களிலும் ஒழுக்கத்தை பேணக் கூடியதாக இருக்கும். ஆனால், இன்று அரசியல்வாதிகளிடம் ஒழுக்க விழுமியங்கள் மழுங்கிப் போய் காணப்படுகின்றன.

நாட்டில் உள்ள சட்ட, திட்டங்களின் படி  அதிகம் தண்டிக்கப்படுகின்றவர்களாக சாதாரண மக்கள் தான் காணப்படுகிறார்கள். ஆனால் அரசியல்வாதிகளும் உயர் அதிகாரிகளும் முக்கியமான மதத் தலைவர்களும் குற்றமிழைத்த போதிலும்   சட்டத்தினால்   அவர்கள் பாதுகாக்கப்படுவதை தாராளமாகக் காணலாம்.

நன்றி வீரகேசரி

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்