Paristamil Navigation Paristamil advert login

பெண்களை எச்சரிக்கும் மருத்துவர்கள்... எதற்காக தெரியுமா?

பெண்களை எச்சரிக்கும் மருத்துவர்கள்... எதற்காக தெரியுமா?

21 ஆவணி 2024 புதன் 12:16 | பார்வைகள் : 817


தைராய்டு நோய் என்பது ஒரு பொதுவான எண்டோகிரைன் கோளாறு என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர், இது உலகளவில் பலரை பாதித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தைராய்டு என்பது கழுத்தில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும். மூளை, இதயம், தசைகள் மற்றும் பிற உறுப்புகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி வெளியிடுகிறது.

உடல் தனக்குக் கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளவும் கதகதப்புடன் வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் தைராய்டு நோயால் பெரியவர், சிறியவர் என்ற வித்தியாசமின்றி அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர். தைராய்டு நோய் சோர்வு, எடை அதிகரிப்பு அல்லது குறைப்பு, முடி உதிர்தல், வறண்ட சருமம் மற்றும் மனநிலை மாற்றங்கள் உள்ளிட்ட பல அறிகுறிகளை ஏற்படுத்தும்.

தைராய்டு சிறப்பு மருத்துவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் ரெட்டி கூறியதாவது, தைராய்டு பிரச்சனை ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களில் பத்து சதவிகிதம் பேருக்கு ஆட்டோ இம்யூன் நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தைராய்டில் பல்வேறு வகைகள் உள்ளன.

ஹைப்போ தைராய்டிசம், ஹைப்பர் தைராய்டிசம் ஆகியவை தைராய்டு சுரப்பி போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்யாத போது ஏற்படும் பொதுவான அறிகுறிகளாகும். சோர்வு, எடை அதிகரிப்பு, மலச்சிக்கல், எப்பொழுதும் குளிர்ச்சியாக இருப்பது, முடி உதிர்தல், நினைவாற்றல் குறைபாடு, மூச்சுத் திணறல், பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப் பிரச்சனைகள், மாதவிடாய் ஒழுங்கற்ற நிலை இவை அனைத்தும் தைராய்டு அறிகுறிகளாகும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள், உடனடியாக மருத்துவரிடம் சென்று தைராய்டு பரிசோதனை செய்து தகுந்த மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த தைராய்டின் அதிகப்படியான உற்பத்தி சிக்கலை ஏற்படுத்தும். கடுமையான நோய், ஆட்டோ இம்யூன் நோய் மற்றும் தைராய்டு புற்றுநோய் ஆகியவை இதில் அடங்கும்.

போதைப்பொருள் பயன்பாடு உட்பட பல்வேறு காரணங்களால் ஹைப்பர் தைராய்டிசத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு வெப்பம் தாங்காது மற்றும் இதய படபடப்பாக இருக்கும். தைராய்டு ஹார்மோன்களின் அதிகப்படியான உற்பத்தியால் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

அதுமட்டுமல்லாமல், வாழ்க்கைமுறை மாற்றங்களால் தைராய்டு வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு. கடுமையான புகைப்பிடித்தல் மற்றும் அதிக அளவு மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்துதல் போன்ற காரணங்களும் தைராய்டு உருவாகும். ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்கள் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து, மருந்துகளைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குளிர்பானங்கள் குடிப்பதால் தைராய்டு வராது. ஆனால் குளிர் பானங்களில் லித்தியம் அதிகமாக இருந்தால் தைராய்டு வர வாய்ப்பு உள்ளது. அதனால் தான் நீங்கள் குடிக்கும் பானங்களில் லித்தியம் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், அயோடின் சத்து குறைவாக உள்ள உப்பை எடுத்துக் கொள்வது தைராய்டு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதனால்தான் அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. இது போன்ற முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடித்தால் தைராய்டு நோயை பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தவிர்க்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்