Paristamil Navigation Paristamil advert login

யாழில் பொலிஸ் நிலையத்தின் முன் இடம்பெற்ற வாள்வெட்டு

யாழில் பொலிஸ் நிலையத்தின் முன் இடம்பெற்ற வாள்வெட்டு

22 ஆவணி 2024 வியாழன் 12:29 | பார்வைகள் : 1020


யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் நிலையத்தின் முன்பாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பொலிஸ் நிலையத்திற்கு எதிரே உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலை செய்யும் இளைஞன் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகத்தில் ஒரு இளைஞனை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்