Paristamil Navigation Paristamil advert login

கோலியை விட ரிஷாப் பன்ட்டைதான் அவுஸ்திரேலிய மக்கள் விரும்புகிறார்கள்

கோலியை விட ரிஷாப் பன்ட்டைதான் அவுஸ்திரேலிய மக்கள் விரும்புகிறார்கள்

23 ஆவணி 2024 வெள்ளி 05:31 | பார்வைகள் : 427


அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரிஷாப் பன்ட் முக்கிய வீரராக இருப்பார் என முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடர் அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் கருத்து தெரிவித்துள்ளார். 

அவர் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட்-ஐ மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார். 

2020-21ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தில் ரிஷாப் பன்ட் சிறந்த வீரராக இருந்தார். 

அவர் 97 மற்றும் 89 ஓட்டங்களை விளாசி மிரட்டினார்.  

ரிஷாப் பன்ட் குறித்து ஹேடன் கூறுகையில், "ரிஷாப் பன்ட் போன்றவர்களுக்கு Muscle memory மற்றும் வெற்றிக்கான தாகம் உள்ளது. 

கடந்த முறை அவர் அங்கு விளையாடியபோது அவர் ஒரு முக்கிய வீரராக இருந்தார்.

மேலும், அவுஸ்திரேலிய மக்களும் அவரை நேசித்தார்கள். ஏனெனில் அவர் விளையாடிய விதத்தின் தன்மைதான். 

இது உற்சாகமாக இருந்தது. இது புதுமையாக இருந்தது. இது புதுமையாகவும், நன்றாகவும் இருந்தது.


அவரைத் தொடர்ந்து, விராட் கோலியைப் போல உங்கள் பழைய காரியதரிசிகள் மீண்டும் இங்கே தாக்கத்தை ஏற்படுத்த விரும்புவார்கள். 

இம்முறை துடுப்பாட்ட பார்வையில் அவுஸ்திரேலிய சூழ்நிலைகளை இந்திய அணி எவ்வாறு கையாள்கிறது என்பதைப் பார்ப்பது ஆர்வமாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.         

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்