Paristamil Navigation Paristamil advert login

சிலந்தி கடிக்குள்ளான சிறுவன்.. நான்கு நாட்களில் 5 கிலோ எடை குறைந்த சோகம்..!

சிலந்தி கடிக்குள்ளான சிறுவன்.. நான்கு நாட்களில் 5 கிலோ எடை குறைந்த சோகம்..!

23 ஆவணி 2024 வெள்ளி 09:12 | பார்வைகள் : 3128


சிலந்தி கடிக்குள்ளான சிறுவன் ஒருவன் நான்கு நாட்களில் ஐந்து கிலோ எடை குறைந்த அதிர்ச்சிகரமான சம்பம் ஒன்று தெற்கு பிரான்சில் இடம்பெற்றுள்ளது.

Narbonne (Aude) நகரில் இச்சம்பவம் கடந்த ஜூலை 28 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. 17 வயதுடைய சிறுவன் ஒருவன் அன்று மாலை கடற்கரையில் விளையாடிவிட்டு மிதிவண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில், கணுக்காலில் சிலந்தி ஒன்று கடித்துள்ளது.

முதலில் எரிவு மற்றும் சிறு காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கால் விறைப்புக்கு உள்ளாகியுள்ளது. மருத்துவரிடம் காண்பிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்கொள்ளப்பட்டும்  சிறுவன் குணமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து சிறுவன் மிக வேகமாக எடை குறைப்புக்கு உள்ளானதாகவும், அடுத்த நான்கு நாட்களில் மொத்தமாக 5 கிலோ எடை குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிறுவனுக்கு கால்களில் எலும்பு சிதைவடைந்து ஓட்டை போன்று காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறுவனைக் கடித்த சிலந்தி வகை எது என்பது தொடர்பில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்