Paristamil Navigation Paristamil advert login

நேபாளத்தில் கோர விபத்து - 14 பேர் பலி

 நேபாளத்தில் கோர விபத்து - 14 பேர் பலி

23 ஆவணி 2024 வெள்ளி 15:19 | பார்வைகள் : 1119


நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் உள்ள மர்ஸ்யாங்டி என்ற ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளது.

14 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளத்தில் பொக்காராவில் இருந்து காத்மாண்டு நோக்கி இந்தியர்கள் 40 பேர் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது தனாஹூன் மாவட்டத்தில் உள்ள மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகேயுள்ள சாலையில் சென்ற போது பேருந்து சாரதி கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பயணிகள் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், மீட்புப்பணிகளை உள்ளூர் மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.

நீச்சல் வீரர்கள் உதவியுடன் ஆற்றில் விழுந்த 16 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


உயிரிழந்தவர்கள் அனைவரும் இந்தியர்களா? என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்