Paristamil Navigation Paristamil advert login

■ சீரற்ற காலநிலை.. 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

■ சீரற்ற காலநிலை.. 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

23 ஆவணி 2024 வெள்ளி 20:26 | பார்வைகள் : 1583


நாளை சனிக்கிழமை நாட்டின் சில மாவட்டங்களில் சீரற்ற காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகமான காற்று, சில பகுதிகளில் ஆலங்கட்டியுடன் கூடிய மழை, சில இடங்களில் வெள்ள பாதிப்பு போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் என Météo France எச்சரித்துள்ளது.

Allier (03), Ariège (09), Aveyron (12), Cantal (15), Côte-d'Or (21), Haute-Garonne (31), Gers (32), Lot (46), Haute-Marne (52), Meurthe-et-Moselle (54), Meuse (55), Moselle (57), Puy-de-Dôme (63), Hautes-Pyrénées (65), Haute-Saône (70), Saône-et-Loire (71), Tarn (81), Tarn-et-Garonne (82) மற்றும் Vosges (88) ஆகிய 19 மாவட்டங்களுக்கு 'செம்மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

புயல் மணிக்கு 90 தொடக்கம் 110 கி.மீ வேகம் வரை பதிவாகும் எனவும், மழை 30 தொடக்கம் 45 மி.மீ வரை பதிவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்