Paristamil Navigation Paristamil advert login

நிலவின் மண்ணில் இருந்து தண்ணீரை பிரித்தெடுத்த விஞ்ஞானிகள்

நிலவின் மண்ணில் இருந்து தண்ணீரை பிரித்தெடுத்த விஞ்ஞானிகள்

28 ஆவணி 2024 புதன் 08:19 | பார்வைகள் : 5554


நிலவை மனிதர்கள் வாழத் தகுந்ததாக மாற்ற சீன விஞ்ஞானிகள் புதிய பரிசோதனையை தொடங்கியுள்ளனர்.

மனிதன் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத நீர் ஆதாரங்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சீன அறிவியல் அகாடமியில் (CAS) உள்ள நிங்போ இன்ஸ்டிடியூட் ஆப் மெட்டீரியல்ஸ் டெக்னாலஜி அண்ட் இன்ஜினியரிங் விஞ்ஞானிகள் சந்திரனின் மேற்பரப்பில் இருந்து சேகரிக்கப்பட்ட மண்ணில் இருந்து தண்ணீரை பிரித்தெடுத்துள்ளனர்.

சாங்கே -5 பணியின் ஒரு பகுதியாக, சந்திரனின் மேற்பரப்பில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் 1,200 கெல்வினுக்கு மேல் வெப்பப்படுத்தப்பட்டது மற்றும் ஒரு சிறப்பு செயல்முறை மூலம் நீர் எடுக்கப்பட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஒரு டன் மண்ணில் இருந்து சுமார் 500 லிட்டர் குடிநீர் தயாரிக்க முடியும் என்று அவர்கள் கூறினர்.

நிலவில் உள்ள மண்ணில் இருந்து தயாரிக்கப்படும் தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகவும் பிரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

11 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்