Paristamil Navigation Paristamil advert login

ரொறன்ரோவில் துப்பாக்கி வன்முறை - 48 பேர் கைது

ரொறன்ரோவில் துப்பாக்கி வன்முறை - 48 பேர் கைது

31 ஆவணி 2024 சனி 15:05 | பார்வைகள் : 1279


ரொறன்ரோவில் துப்பாக்கி வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரு வேறு விசாரணைகளின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ போலீசார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களுக்கு எதிராக 46 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 24 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரொறன்ரோ பொலிஸின் 43 ஆம் பிரிவில் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் 24-ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் ஏழு துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

14 வயது முதல் 55 வயது வரையிலான சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு எதிராக பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்