Paristamil Navigation Paristamil advert login

வவுனியாவில் ரணிலின் பதாதைகளை அகற்றிய பொலிஸார்

வவுனியாவில் ரணிலின் பதாதைகளை அகற்றிய பொலிஸார்

1 புரட்டாசி 2024 ஞாயிறு 11:03 | பார்வைகள் : 510


வவுனியாவில் காட்சி படுத்தப்பட்டிருந்த ரணில் மற்றும் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தானின் பதாதைகள் பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (01) அன்று அகற்றப்பட்டுள்ளது .

வவுனியாவில்  தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக ரணில் விக்கிரமசிங்க வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.

இந் நிலையில் வவுனியா நகரப்பகுதிகளில் ரணில் மற்றும் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான் ஆகியோரது உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்த பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்துள்ளது .

குறித்த பதாதைகள் ஜனாதிபதி ரணில் வருகை தருவதற்கு முன்பு பொலிஸாரால் அகற்றப்பட்டதாகவும் இச் சம்பவத்தை செய்தி சேகரித்துக் கொண்டிருந்த வவுனியா பிராந்திய ஊடகவியலாளர்கள் இருவரை அழைத்தபொலிஸார் அவர்களின் விவரங்களை பதிவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது .


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்