Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : பெண் மீது - சுத்தியல் தாக்குதல்..!!

பரிஸ் : பெண் மீது - சுத்தியல் தாக்குதல்..!!

1 புரட்டாசி 2024 ஞாயிறு 13:49 | பார்வைகள் : 931


பெண் ஒருவர் சுத்தியலால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் ஓகஸ்ட் 30, வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. பிற்பகல் 3.40 மணி அளவில் இச்சம்பவம் Boulevard Emile-Augier பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. பெண் ஒருவர் அவரது கணவரால் சுத்தியலால் தாக்கப்பட்டுள்ளார். தலையில் தாக்கப்பட்டதில் மடை ஓடு உடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

தாக்குதல் மேற்கொண்ட நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

இவ்வருடத்தில் குடும்ப வன்முறை காரணமாக 68 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்