ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு..!

1 புரட்டாசி 2024 ஞாயிறு 18:00 | பார்வைகள் : 7338
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கொடுப்பனவுகள் 5.2% சதவீதத்தால் அதிகரிக்கப்பட உள்ளது.
கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் இதனால் நன்மையடைய உள்ளனர். 50 யூரோக்களில் இருந்து 60 யூரோக்கள் வரை இந்த கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும் என பொருளாதார அமைச்சர் Bruno Le Maire அறிவித்தார்.
2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்த அதிகரிப்பு பதிவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இறுதியாக ஒருவருடத்தின் பின்னர் இம்மாதம் நடைமுறைக்கு வருகிறது.,