Paristamil Navigation Paristamil advert login

■ விசேட செய்தி : கடலில் மூழ்கி 12 அகதிகள் பலி..!

■ விசேட செய்தி : கடலில் மூழ்கி 12 அகதிகள் பலி..!

3 புரட்டாசி 2024 செவ்வாய் 14:28 | பார்வைகள் : 2679


பிரித்தானியா நோக்கி படகில் பயணித்த 12 அகதிகள், படகு மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

பா-து-கலே மாவட்டத்தின் Cap Gris-Nez (Pas-de-Calais) கடற்பிராந்தியம் வழியாக படகில் பயணித்த அகதிகளே கடலில்  மாண்டுள்ளனர். மிகப்பெரிய தேடுதல் பணிகள் அங்கு இடம்பெற்று வருகிறது. முதல்கட்ட தகவல்களின் படி, படகு ஒன்றில் 65 அகதிகளை ஏற்றிக்கொண்டு பிரித்தானியா நோக்கி பயணித்த நிலையில், படகு கவிழ்ந்துள்ளது. 

இதுவரையான தகவல்களின் படி 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இருவர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் Gérald Darmanin
சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்