Paristamil Navigation Paristamil advert login

பரிசில் இருந்து கொங்கோவுக்கு.. 100,000 குரங்கம்மை தடுப்பூசி..!

பரிசில் இருந்து கொங்கோவுக்கு.. 100,000 குரங்கம்மை தடுப்பூசி..!

4 புரட்டாசி 2024 புதன் 18:54 | பார்வைகள் : 2172


ஆபிரிக்காவில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, தடுப்பூசிகளை வழங்குவதற்கு பிரான்ஸ் உறுதியளித்திருந்தது.

இந்நிலையில், நாளை செப்டம்பர் 5 ஆம் திகதி வியாழக்கிழமை முதல்கட்ட தடுப்பூசிகளை கொங்கோவுக்கு (République démocratique du Congo) அனுப்பி வைக்க உள்ளது. நாளை மாலை 5 மணிக்கு இந்த முதல்கட்ட தடுப்பூசிகள் அங்கு விநியோகிக்கப்படும் என பரிஸ் மருத்துவமனைகளுக்கான சபை ( AFP) அறிவித்துள்ளது. 

ஆபிரிக்காவில் இதுவரை 17,500 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 629 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையிலேயே தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றிய மருந்துகள் கூட்டமைப்பு சபை வழியாக ஆபிரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது பிரான்ஸ்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்