Paristamil Navigation Paristamil advert login

ஆற்றிற்குள் உடற்பாகங்கள்  - நீடிக்கும் மர்மம்!!

ஆற்றிற்குள் உடற்பாகங்கள்  - நீடிக்கும் மர்மம்!!

3 ஆவணி 2024 சனி 09:58 | பார்வைகள் : 2562


கல்வாடேவிலுள்ள (Calvados) கோன் நகரத்தின் நதி நீரோட்டமான anal de Caen இல் மீன் பிடிக்கச் சென்றவர்கள் மனித உடற்பாகங்களைக் கண்டுள்ளனர்.
மனித உடலின் கீழ்ப்பாகங்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உடனடியாக இராணுவத்தினரும் ஜோந்தார்மினரும் குவிக்கப்பட்டு மனித உடலின் மிகுதிப்பகுதியின் தேடுதலில் ஈடுபடத்தப்பட்டுள்னர்.

அதிலிருந்து சற்றுத் தொலைவிவிலுள்ள அடுத்த கிராமத்தில், இன்னொரு கால் ஒன்றை மீனவன் ஒருவர் கண்டெடுத்துள்ளார்.

இவை இரண்டும் ஒரே உடலிற்குச் சொந்தமானதா, இல்லை பல கொலைகள் நடந்துள்ளனவா என்ற மர்மம் நீடிக்கின்றது.

இதுவரை, மரபணுச் சோதனைகள் ஒரு பெறுபேற்றையும் வழங்கவில்லை. தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்