பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

3 ஆவணி 2024 சனி 10:48 | பார்வைகள் : 7022
பிலிப்பைன்ஸில் 03.08.2024 சனிக்கிழமை 6.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக என்று ஜெர்மன் புவி அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் மின்டானோ தீவின் கிழக்குக் கரையில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் கடலில் பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலை கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
6.8 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் , சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சேதம் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், நிலநடுக்கத்துக்குப் பிந்திய நிலஅதிர்வுகள் ஏற்படக்கூடும் என பிலிப்பைன்ஸ் நிலநடுக்க ஆய்வு நிறுவனம் எச்சரிகை விடுத்துள்ளது.
அதேவேளை பிலிப்பைன்ஸ் பசிபிக் பெருங்கடலின் ‛ரிங் ஆஃப் ஃபயர்' எனும் பகுதியில் அமைந்துள்ளது.
மேலும் இங்கு எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1