Paristamil Navigation Paristamil advert login

15 தொன் சிகரெட் பெட்டிகள் சுங்கவரித்துறையினரால் பறிமுதல்..!

15 தொன் சிகரெட் பெட்டிகள் சுங்கவரித்துறையினரால் பறிமுதல்..!

5 ஆவணி 2024 திங்கள் 15:51 | பார்வைகள் : 2273


சட்டவிரோதமாக விற்பனைக்கு தயாராக இருந்த 15 தொன் எடையுள்ள சிகரெட் பெட்டிகள் சுங்கவரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்தவாரத்தில் இந்த பறிமுதல் இல் து பிரான்ஸ் மாகாணத்தின் சில பகுதிகளில் இடம்பெற்றதாகவும், வெவ்வேறு இடங்களில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை ஒரே நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மொத்தமாக 15.76 தொன் எடைகொண்ட சிகரெட் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.



இவ்வாண்டில் ஒரே நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் பெட்டிகளில் அதிக எடை கொண்டது இதுவாகும்.

முன்னதாக 2023 ஆம் ஆண்டில் மொத்தமாக 521 தொன் எடைகொண்ட சிகரெட் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்