Paristamil Navigation Paristamil advert login

யாழ்ப்பாணத்திற்கு பிற்பகலிலும் ஆரம்பமாகும் விமான சேவை

யாழ்ப்பாணத்திற்கு பிற்பகலிலும் ஆரம்பமாகும் விமான சேவை

6 ஆவணி 2024 செவ்வாய் 15:27 | பார்வைகள் : 1105


சென்னை – யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவையை, செப்டமர் 1ம் திகதி முதல் தொடங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அலையன்ஸ் ஏர் நிறுவனம் யாழ்ப்பாணத்திற்கு காலை வேளையில் விமான சேவையை தொடங்கியது. இந்த விமான சேவை, திங்கள், செவ்வாய், வியாழன், சனி என வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கப்படுகிறது. வாரத்தில் 4 நாட்கள் அதுவும் ஒரு முறை மட்டுமே யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை வழங்கப்பட்ட நிலையில் தற்போது புதிய விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

சென்னையில் இருந்து நாள்தோறும் பிற்பகலில் யாழ்ப்பாணத்திற்கு விமான் சேவை அளிக்கப்பட உள்ளது. சென்னை – யாழ்ப்பாணம் இடையே இந்த புதிய விமான சேவையை செப்டம்பர் 1ம் தேதி முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்க உள்ளது.

சென்னையில் விமான நிலையத்தில் இருந்து பகல் 1.55 மணிக்கு புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 3.10 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை சென்றடையும். மாலை 3.55 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மீண்டும் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்